/* */

காண்போரை கவர்ந்த ராணுவபடை அணிவகுப்பு

காண்போரை கவர்ந்த ராணுவபடை அணிவகுப்பு
X

சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டையில் நடைபெற்ற துணை ராணுவப் படையின் கொடி அணிவகுப்பு காண்போரை கவர்ந்தது.

சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சாஸ்த்திர சீமா பால் கம்பெனியை சேர்ந்த 92 துணை ராணுவ படையினர் வந்தடைந்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் மத்திய துணை ராணுவப் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை அரசு பொது வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு கீழராஜ வீதி, வடக்குராஜவீதி, பிருந்தாவனம், மேலராஜவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே நிறைவடைந்தது.இதில் 92 துணை ராணுவப்படையினர் மற்றும் அதிரடிப்படை போலீசார் 50கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு வந்த காட்சி காண்போரை கவர்ந்தது.

Updated On: 3 March 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?