Begin typing your search above and press return to search.
நியாயவிலை கடைகள் இன்று முதல் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தமிழக அரசின் உத்தரவுபடி மாற்றம் செய்யப்பட்ட நேரங்களில் நியாய விலைக்கடை இயங்கியது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன இந்நிலையில்,
இன்று முதல் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முற்பகல் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீரனூர் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான ரேஷன் பொருட்களை, நியாயவிலை கடைக்கு சென்று இரு வேளைகளிலும் பெற்று சென்றனர்..