/* */

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம்

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம்
X

 அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செந்தமில் நகரில் சித்திரவேல் என்பவர் வீடு கட்டி வருகிறார்.அவர் வீட்டு மேற்கூரை அமைப்பதற்கான காங்கிரிட் வேலை நடைபெற்று வருகிறது.

அங்கு வேலை பார்த்த கொத்தனார்கள் மற்றும் சித்தாள்கள் உள்ளிட்ட தொழிலாளிகளுக்கு அறந்தாங்கியில் உள்ள தனியார் பிரியாணி ஹோட்டலில் நேற்று 40 கோழி பிரியாணி ஆர்டர் செய்து வாங்கி கொடுத்துள்ளார்.

இன்று காலை முதல் இந்த கோழி பிரியாணியை சாப்பிட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. பதறிபோன தொழிலாளிகள் மற்றும் குடும்பத்தார்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு வந்தபின்தான் மற்றவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு இங்கு வந்துள்ளது தெரியவந்தது. தற்பொழுது 41நபர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 மற்றும் 12 வயதுடைய பெண் குழந்தைகள் இருவரும்,8 மற்றும் 14 வயதுடைய ஆண் குழந்தைகள் இருவரும் அடங்குவர். இன்னும் தொடர்ந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

தற்பொழுது அறந்தாங்கி கோட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அறந்தாங்கி கோட்டாச்சியர் சொர்ணராஜ்,மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையினர் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த், துணை தலைவர் முத்து, முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறிவருகின்றனர்.

Updated On: 6 May 2022 7:49 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்