/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு, பலி 3 ஆக உயர்ந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு, பலி  3 ஆக உயர்ந்தது
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னாங்குட்டி(70). விவசாயியான இவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், இவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சின்னாங்குட்டி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மதுரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் மட்டும் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தக் நிலையில் தற்போது சின்னாங்குட்டி என்பவரும் இருந்துள்ள நிலையில் ஆலங்குடி தாலுகாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளதல் ஆலங்குடி தாலுகா பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!