/* */

நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல்

உயிரிழந்த 2 இளைஞர்களின் குடும்பத்திற்கும் ததனது சொந்த நிதியிலிருந்து தலா 50 ஆயிரத்தை அமைச்சர் வழங்கினார்

HIGHLIGHTS

நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு  அமைச்சர் மெய்யநாதன் ஆறுதல்
X

ஆலங்குடி அருகே நீரில் மூழ்கி இறந்த இளைஞர்களின் குடும்பத்துக்கு   நேரில் சென்று ஆறுதல் கூறிய   அமைச்சர் மெய்யநாதன்

நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் சுற்றுச்சூழல்துறை சிவ.வீ. மெய்யநாதன். ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள நீர்பள்ளம் குளத்திற்கு குளிக்கச் சென்றபோது எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி நேற்று அசோக், கண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்றைய பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தை கேட்டு உடனடியாக கோட்டைக்காடு சென்றப இளைஞர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பத்திற்கும் தலா 50 ஆயிரம் வழங்கி அமைச்சர், அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 8 Nov 2021 3:45 PM GMT

Related News