/* */

கண் பார்வை குறையுள்ள குழந்தைக்கு மருத்துவ உதவி செய்த எம்.எல்.ஏ

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கனாம்பட்டியில் கண் பார்வை குறையுள்ள பெண் குழந்தைக்கு திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதன் குழந்தையின் சிகிச்சைக்காக ரூபாய் 2 லட்சம் வழங்கினார்.

HIGHLIGHTS

கண் பார்வை குறையுள்ள குழந்தைக்கு மருத்துவ உதவி செய்த எம்.எல்.ஏ
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட மாங்கனாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் அமுதா தம்பதியினர் . இவர்களது மகள் ரக்க்ஷிதா . இரண்டு வயது பெண் குழந்தையான இவருக்கு வினோதமான நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது . கண் திறந்த நிலையிலேயே இருக்கும் கண்ணை மூட முடியாது குழந்தை உணர்வில் தூங்கினாலும் கண்கள் திறந்தபடியே இருக்கும் மேலும் கண்கள் நிறம் மாறி வெள்ளையாக நிறம் மாறிவிடும். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று காண்பித்தனர்.

அப்போது குழந்தைக்கு தொடர்ந்து நாளொன்றுக்கு பத்து முறை மருந்து போட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். இதேபோல் 10 வயது வரை நாள்தோறும் மருந்து போடவேண்டும் என்று கூறியுள்ளனர். கூலி வேலை செய்து பிழைக்கும் செல்வராஜ் அமுதா தம்பதியினருக்கு கண்ணுக்கு தேவையான மருந்து வாங்க போதிய பணம் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு பிரச்சாரத்திற்காக வந்த திமுக தலைவர் மு .க .ஸ்டாலினிடம் செல்வராஜ் அமுதா தம்பதியினர் தனது குழந்தைக்கு சிகிச்சைக்காக உதவுமாறு மனு கொடுத்தனர் . மனுவை படித்த மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த குழந்தையின் வீட்டிற்கு சென்று பார்த்து தேவையான உதவிகளை செய்யுமாறு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதனுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாங்கனாம்பட்டியில் உள்ள அந்த குழந்தையின் வீட்டிற்கு சென்ற எம்எல்ஏ மெய்யநாதன் குழந்தையின் மருந்து செலவிற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கினார். அப்போது எம்எல்ஏ மெய்யநாதன் ஸ்டாலினுக்கு போன் மூலம் தகவல் சொல்ல விபரம் கேட்ட ஸ்டாலின் போன் மூலம் குழந்தையின் தாய் அமுதாவிடம் மீண்டும் விவரம் கேட்டு ஆறுதல் கூறினார்.

Updated On: 16 Feb 2021 5:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  4. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  8. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!