Begin typing your search above and press return to search.
பொதுமக்கள் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள் -முதல்வர் வேண்டுகோள்
மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் -முதல்வர் மு.க.ஸ்டாலின்
HIGHLIGHTS
சென்னையில் எதிர்பாராத மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது, இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியதாவது :
வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.
பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன், என்று தெரிவித்தார்.