/* */

தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டம்

தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட திட்டம்
X

டாஸ்மாக் மதுபான கடை (கோப்பு படம்)

தமிழகத்தில் விரைவில் சுமார் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு வாணிப கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. மதுபான கடைகளுடன் சேர்ந்து மது கூடங்களும் (பார்) நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு அதனை வாங்குபவர்களிடம் பாட்டிலில் உள்ள விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் இது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு சென்றடைவதாகவும் எதிர்க்கட்சி தலைவர்களால் பரபரப்பாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த மாதம் கள்ள சாராயம் குடித்த 23 பேர் பலியானார்கள். அரசு மதுபான கடைகளில் அதிக விலைக்கு வாங்க முடியாதவர்கள் இப்படி கள்ளச்சாராயம் சாப்பிட்டு உயிரை இழப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் சுருண்டு விழுந்து செத்தார்கள். அவர்கள் சாப்பிட்ட மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டாலும் இதுவும் ஒரு பெரிய குற்றச்சாட்டாக பேசப்பட்டு வந்தது.

அந்த வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளால் தி.மு.க. அரசிற்கு தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்பட்டு வருவதாக உளவுத்துறை அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதுபான விற்பனை பிரச்சினையில் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவும் இந்த அரசு மீது உள்ள களங்கத்தை துடைப்பதற்காகவும் மாநிலம் முழுவதும் சுமார் 500 மதுபான கடைகளை விரைவில் மூட இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் உள்ள மதுபான கடைகளை மூடலாம் என அதிகாரிகள் பட்டியல் தயார் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கோவில்கள் அருகில் உள்ள மதுபான கடைகள் முதற்கட்டமாக மூடப்படும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வர இருப்பதாகவும் பரபரப்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கருத்து ஆக உள்ளது.

Updated On: 7 Jun 2023 5:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு