/* */

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு: உரிமையியல் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி

சென்னையில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரும் வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

HIGHLIGHTS

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு: உரிமையியல் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி
X
சென்னை உயர்நீதிமன்றம்.

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தான் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.கவை சேர்ந்த சி.பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் இடைப்பாடி பழனிசாமி கூறுகையில், பொதுக்குழுவுக்கு வாருங்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு , செயற்குழு நடக்கும். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், ஒற்றை தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அளித்த மனுவை ஏற்க ஆவடி காவல்துறையினர் தடாலடியாக மறுத்து விட்டனர்.இதனால் பன்னீர்செல்வம் தரப்பினர் கடுமையாக அதிர்ந்து போயுள்ளனர்.

எப்படி பார்த்தாலும் பொதுக்குழுவை கூட்டுவதில் முன்னாள் முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான இடைப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். அதற்கு ஏற்ப நீதிமன்றத்தின் உத்தரவும் காவல்துறை செயல்பாடும் அவருக்கு ஆதரவாகவே அமைந்துள்ளது.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் 2,625 பேரையும் தமது பக்கம் இழுக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களாகவே திரைமறைவில் காய் நகர்த்திய இடைப்பாடி பழனிச்சாமி, அதில் வெற்றியும் கண்டு விட்டதாகவே சூழ்நிலைகள் அனைத்தும் அவருக்கு சாதகமாக இருப்பதன் மூலம் உணர முடிகிறது. அதனால் அ.தி.மு.க.,வின் அந்த ஒற்றைத் தலைமை இடைப்பாடி பழனிச்சாமி தான் என்பதற்கு உரிய அறிகுறிகள் அரசியல் வானில் மேகமூட்டங்கள் விலகி தெரிய ஆரம்பித்து விட்டது. எதற்கும் இன்னும் ஒருநாள் பொறுத்திருங்கள் என்கின்றனர், இடைப்பாடி பழனிச்சாமி விசுவாசிகள்..!

Updated On: 4 July 2022 10:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?