/* */

பெரம்பலூர்: வனப்பகுதியில் கிடந்த பெண் சடலம்

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் வனப்பகுதியில் கிடந்த பெண் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: வனப்பகுதியில் கிடந்த பெண் சடலம்
X

அன்னமங்கலம் வனப்பகுதியில் பெண் உடல் மீட்கப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் மலையடிவார பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றிகாவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் காவல் துறையினர் உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பெண் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடைபெற்றது. அன்னமங்கலம் மலையடிவார பகுதியில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 21 Sep 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?