Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் ஆடு மேய்த்த பெண்ணின் காதை அறுத்து செயின் பறிப்பு
பெரம்பலூரில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணின் காதை அறுத்து மர்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் , ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மணி மனைவி ஜெகதாம்பாள் ( 52 ) . இவர் , இன்று மாலை 5 மணியளவில் ஆதனூர் - சீராநத்தம் செல்லும் வழியில் சாலையின் ஓரமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் .
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த , அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் , ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் மற்றும் காதில் அணிந்திருந்த 1/4 பவுன் தோடு ஆகியவற்றை அறுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர் . இது குறித்து ஜெகதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் , மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . காது மற்றும் கழுத்தில் காயமடைந்த அந்தப் பெண் அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .