/* */

மாணவர்களை நிற்க வைத்து பிரம்பால் அடித்த ஆசிரியை- வைரலாக பரவும் காட்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை நிற்க வைத்து ஆசிரியை பிரம்பால் அடித்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

HIGHLIGHTS

மாணவர்களை நிற்க வைத்து பிரம்பால் அடித்த ஆசிரியை- வைரலாக பரவும் காட்சி
X

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை.

பெரம்பலூர் அருகே சு.ஆடுதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்களே இங்கு பெரும்பாலும் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் சு.ஆடுதுறை பள்ளி தலைமை ஆசிரியை வண்டார்குழலி என்பவர் மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து பிரம்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதலங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் இயங்குவோர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். பிரம்பால் அடிக்கும் வீடியோ குறித்து விசாரித்ததில் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்த காரணத்தால் தலைமை ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த காட்சிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும்,அது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிகிறது.மாணவர்களை எக்காரணம் கொண்டும் அடிக்க கூடாது என்று கூறப்படும் நிலையில்,தலைமை ஆசிரியை பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பிரம்பால் அடித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 Oct 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  3. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  5. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  6. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  8. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு