/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கோயில்களில் அடுத்தடுத்து கொள்ளை
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் எல்லையம்மன் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்கள் உள்ளன . பூசாரி மருதமுத்து கோயிலுக்கு விளக்கு போட்டு விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார் .

இன்று காலை தர்மகத்தா மனைவி சரோஜா பால் கறக்க செல்லும்பொழுது கோவிலை பார்த்த போது , கோயில் பூட்டு உடைந்து கேட் திறந்த நிலையில் இருப்பதை கண்டு , தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார் . கோவிலில் சென்று பார்த்த போது இரண்டு உண்டியல்களையும் காணவில்லை . பின்னர் தேடிய போது அம்மா பூங்கா அருகில் ஒரு உண்டியலும் , பெருமத்தூர் பிரிவு சாலை அருகே ஒரு உண்டியலும் , கிடந்ததை கண்டு பிடித்தனர் . அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ. 15 ஆயிரம் பணத்தை காணவில்லை .

இதே போன்று , ஓலைப்பாடியில் உள்ளது அய்யனார் கோவில் . அதன் பூசாரி , மதியம் 1 மணி அளவில் கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார் . இன்று காலை அப்பகுதி மக்கள் பார்த்த போது , கோவிலை திறந்து கிடந்ததுடன் , உண்டியலும் காணவில்லை என அறிந்து தேடிய போது , கல்லை வரும் வழியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே கிடப்பதை அறிந்தனர் .

இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் , கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் , கைரேகை நிபுணர்களுடன் வந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து , கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர் . மேலும் , அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Updated On: 20 Feb 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை