/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
X

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

பெரம்பலுார் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சியிலும் உள்ள பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி பெரம்பலூரில் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது/

இம்முகாமை மாற்றுத் திறனாளிகள் நல் அலுவலர் பொம்மி முன்னிலையில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் .

இம்முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய 48 குழந்தைகளும் , உடல் இயக்க குறைபாடுடைய 24 குழந்தைகளும் , செவித்திறன் குறைபாடுடைய 42 குழந்தைகளும் , பார்வைக் குறைபாடுடைய 43 குழந்தைகளும் ஆக மொத்தம் 157 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் .

இம்மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை மனநல மருத்துவர் வினோத் , எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் சிவராமன் , காது , மூக்கு , தொண்டை மருத்துவர் இரமேஷ் . கண் மருத்துவர் இராஜேஸ்வரி , குழந்தைகள் நல மருத்துவர் பாலமுருகன் , மற்றும் ஆர்.பி.எஸ்.கே. மருத்துவர்கள் விவேக் ,ராதிகா . செவி பரிசோதகர் விசாலி , கண் பரிசோதகர் செந்தில்நாதன் , ரேச்சல் ஆகியோர் பரிசோதித்து உதவி உபகரணங்கள் , தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர் .

இதில் நடைப்பயிற்சி சாதனம் 2 குழந்தைகளுக்கும் , கண் கண்ணாடி 14 குழந்தைகளுக்கும் , சிறப்பு சக்கர நாற்காலி 3 குழந்தைகளுக்கும் , கார்னர் சீட் 3 குழந்தைகளுக்கும் , பிரெய்லி கிட் 2 குழந்தைகளுக்கும் , செவித்துணைக் கருவி 5 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 29 குழந்தைகள் உதவி உபகரணங்களுக்காகவும் , 2 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் .

UDID அடையாள அட்டைக்காக 19 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விவரம் பதிவேற்றம் வருவாய் துறை மற்றும் அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியருடன் ஒருங்கிணைந்து இ - சேவை மையங்கள் மூலம் வருமான சான்று விவரங்கள் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டது . முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 42 மாற்றுத்திறனுடைய விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது . ஆதார் அட்டை மாற்றுத்திறனுடைய எடுக்கப்பட்டது . செய்யப்பட்டது .

மாணவர்கள் இல்லாத 6 அட்டை குழந்தைகளுக்கு எல்காட் மூலம் ஆதார் முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனுடைய மாணவர்களில் 23 நபர்களுக்கும் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது . இம்மருத்துவ முகாமில் பெரம்பலுார் மாவட்ட கல்வி அலுவலர் கே.சண்முகம் . வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் , சுப்ரமணியன் , பெரம்பலுார் அரசு உதவி திட்ட அலுவலர் பெரம்பலூர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் வெங்கடேசன் , வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி பொறுப்பு வட்டார கல்வி அலுவலர் மைய மேற்பார்வையாளர் கு.தேவகி , மாவட்ட ஆய்வாளர் பழனிச்சாமி , உள்ளடக்கிய ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் , வட்டார வள கல்வி திட்டக்கூறு பெ.பாரதிதாசன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , பணியாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், சுகாதார நலப்பணியாளர்கள் , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் , இயன்முறை மருத்துவர்கள் , சிறப்பு பயிற்றுநர்கள் , பள்ளி ஆயத்தப்பயிற்சி மைய ஆகியோர் கலந்துகொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பெரம்பலூர் வட்டார வள மேற்பார்வையாளர் தேவகி , மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர் .

Updated On: 11 March 2022 6:03 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்