Begin typing your search above and press return to search.
மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து வாலிபர் சாவு
பெரம்பலூரில், மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து வாலிபர் இறந்து கிடைந்தார். கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள செல்வா நகர் டாஸ்மாக் கடைக்கு வடக்குப் பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதில், இறந்த வாலிபர் குன்னம் வட்டம், நன்னை கிராமத்தை சேர்ந்த, செல்லப்பிள்ளை மகன சேகர் ராஜு ( 34 ) என்பது தெரியவந்தது.
அவர் பெரம்பலூரில் பிரியாணி கடை நடத்தி வருவதும், நேற்று காலை சிறுவாச்சூர் செல்வதாக சென்றவர் இறந்து கிடப்பதும் தெரியவந்தது . சேகர் ராஜு அருகில் மது பாட்டில்களும், பூச்சி கொல்லி மருந்து டப்பாக்களும் கிடந்தன. அவர், மதுவில் விஷம் கலந்து, அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலையா என்ற கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.