Begin typing your search above and press return to search.
கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமரிமன்னன் எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம்,பழையபேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடங்கள் உள்ளது. இதனை தனியார் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் கட்டண கழிப்பிடங்களில் ஆய்வு செய்தார். அப்போது 5 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அதிகபட்சமாக 2 ரூபாய்தான் வசூலிக்க வேண்டும் என்றும் அதைவிட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்நிகழ்வில் துப்புரவு ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக அபராதமும் விதித்தார்.