/* */

பெரம்பலூர் அருகே இன்று சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே இன்று மாலை சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே இன்று சுவர் இடிந்து விழுந்து 3 பெண்கள் உயிரிழப்பு
X

பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மனைவி ராமாயி (47), கலியபெருமாள் மனைவி கற்பகம் (54), மற்றும் இவரது உறவினர் பூவாயி ஆகிய மூவரும், இன்று மாலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மாட்டுப்பட்டியை கடையாக மாற்றுவதற்காக ஒரு பகுதியில் கப்பி மண்ணை கொட்டி நிரப்பி வைத்து விட்டு அசந்து போய் சுவற்றின் அருகே உட்கார்ந்து இருந்தனர்.

அப்போது, பலமில்லாத ஹாலோ பிளாக் சுவர், மூவரின் மீதும் இடிந்து விழுந்தது. இதில் ராமாயி, கற்பகம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். பூவாயி காயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் பூவாயி இறந்துவிட்டார்.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Jan 2022 9:50 AM GMT

Related News