/* */

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீசாரால் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு காவல்துறை போக்குவரத்து பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் டெய்சிராணி தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுப்பையன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியும், அதை பின்பற்றுவதைப் பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பள்ளி அளவில் சாலை பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் சுந்தரவடிவேல், திருநாவுக்கரசு, சீனிவாசன், சாந்தியம்மாள் , உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் , ஆசிரியர் சிவானந்தம் , உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  2. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  4. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்