/* */

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்:குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) தலைமையில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மற்றும் கல்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மேலும் உங்கள் பகுதியில் ஏதேனும் குழந்தை திருமணம் நடை பெற்றால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண் 9498100690 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலை பேசி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 23 Sep 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  5. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  6. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  8. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்