/* */

பெரம்பலூர்: காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு

வாலிபரை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டதாக, காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு
X

வாலிபரை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டதாக, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இன்று சூர்யா, சங்குப்பேட்டை, பெரம்பலூர் என்ற பெயரில், கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் பெரம்பலூர் அருகேயுள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவர், கடந்த 11.09.21 ம் தேதி தன்னிடம் ரூ.5,00,000/- பணம் கொடுத்து செல்வமணியின் மகளான மஞ்சுளாவின் கணவர் பாடலூர் அருகேயுள்ள தெரணி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கொலை செய்யச் சொல்லி கூறியதாகவும், அதன்படி கடந்த 18.09.21 ம் தேதி காலை 06.30 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்திருந்தவரை மஞ்சுளா அழைத்து வர சொன்னதாக கூறி நாங்கள் 5 பேரும் அழைத்து கொண்டு சென்று துறைமங்களம் ஏரியில் கொலை செய்து ஏரியில் போட்டுள்ளதாகவும், இந்த கொலைக்கு...

1.மணிகண்டன் மனைவி மஞ்சுளா.

2. மணிகண்டன் மாமியார் செல்வமணி.

3. பாப்பாத்தி செல்வராஜ்.

4. கற்பகம் செல்வகுமார்.

5. ஆட்டோ டிரைவர் முருகேசன்.

6. குமார் மல்லி கடை ஓனர்.

7. தர்மர் நொண்டி.

8. மருதப் பிள்ளை ‌ஆகியோர்கள் உடந்தை என்று எழுதியுள்ளது.

மேலும் இப்படிக்கு 1. சூர்யா 2 முருகேஷ் என்றும் எழுதப்பட்டுள்ளது.

இதனால் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையிடல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தெரணி கிராமத்தில் விசாரித்த போது, மணிகண்டன் கடந்த சில தினங்களாக காணவில்லை என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் இது போல மணிகண்டன் அடிக்கடி கடிதம் எழுதி யாருக்காவது அனுப்பி விட்டு வெளியூருக்கு சென்று விடும் பழக்கம் உடையவர் என்றும், வெளியூர் சென்றால் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லமாட்டார் என்றும், வாரக்கணக்கில் வரமாட்டார் என்றும், திடீரென மீண்டும் வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் குழப்பத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Updated On: 21 Sep 2021 4:36 AM GMT

Related News