/* */

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு
X

விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழைகாரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மானாவாரி பயிர்களை அதிக அளவு கொண்ட இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை அளவுக்கதிகமான மழை பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து குறிப்பாக மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முறையான கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக குன்னம்தொகுதி செயலாளர் இரா.ஜோக்கியம் மற்றும் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர், பெரம்பலூர் தொகுதி தலைவர் முருகேசன் மற்றும் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் கீர்த்திவாசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Updated On: 20 Dec 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு