/* */

டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை

HIGHLIGHTS

டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்ற கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர்கள் கலெக்டரிடம் மனு
X

மகளைக் காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெற்றோர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள கோவிந்தராஜபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்- ராணி தம்பதியினருக்கு அட்சயா, அபிநயா என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் அபிநயா(18) வேப்பூர் அரசு கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி டைப்ரைட்டிங் வகுப்புக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். பலஇடங்களில் தேடி பார்த்ததில் கிடைக்கவில்லை. இதுகுறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குன்னம் போலீசார் விசாரணையில் முன்னேற்றமில்லை.

இதனிடையே பெற்றோர்கள் விசாரித்த போது, வேப்பூர் அருகே உள்ள கத்தாலை மேடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(19) என்பவருடன் சென்றுவிட்டதாக தகவல் தெரியவந்தது. இந்தத்தகவலை போலீசாரிடம் தெரிவித்த பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையாம். இதையடுத்து, அபிநயாவின் பெற்றோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், புகார் மனு அளித்தனர், இது குறித்து பெற்றோர்கள் தெரிவிக்கையில் காணாமல் போன தனது மகள் 15 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய முத்துக்குமார் என்ற நபரை விசாரித்து, தங்கள் மகள் அபிநயாவை கண்டு பிடித்து தரவேண்டுமெனவும் தெரிவித்தனர்.


Updated On: 15 Sep 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...