/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 18-ம் தேதி சுதந்திர அமைப்பு ஓட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ம் தேதிசுதந்திர அமைப்பு ஓட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில்  18-ம் தேதி சுதந்திர அமைப்பு ஓட்டம்
X

பைல் படம்

இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் நமது நாட்டில் உள்ள 744 மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகம் (மத்திய அரசு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனம் நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. இந் த ஓட்டமானது பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற பதினெட்டாம் தேதி காலை ஏழு முப்பது மணிக்கு நடத்தப்பட உள்ளது.

சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு இதில் பங்கேற்குமாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.அனைத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் சுதந்திர தின ஓட்டத்தில் பங்கேற்கும் பொருட்டு 18.09.2021 அன்று காலை 7.30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்து, நடைபெற உள்ள இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தில் பங்கேற்று உடல்தகுதியினை மேம்படுத்திடவேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்து உள்ளார்.



Updated On: 15 Sep 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து