/* */

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு அதிகரிப்பு

தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1,00,000-ஆக உயர்த்தியுள்ளது.

HIGHLIGHTS

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு அதிகரிப்பு
X

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டம் தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000-லிருந்து ரூ.1,00,000-ஆக உயர்த்தியுள்ளது மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) வகுப்பைச் சார்ந்த மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம், பித்தளை தேய்ப்புப்பெட்டி ஆகியன வழங்கப்படுகின்றன. வீடற்ற ஏழை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மக்கள் வீடு கட்டிக்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.

மேற்படி திட்டங்களின் கீழ் பயன்பெற பயனாளிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.72,000-லிருந்து ரூ.1,00,000- ஆக உயர்த்தி தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மேற்படி திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jan 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...