/* */

பெரம்பலூரில் பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை -பணம் கொள்ளை

பெரம்பலுரில் பெண் போலீஸ் வீடு உள்பட 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

பெரம்பலூர் எம்.எம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பூங்கொடி, பெண் போலீஸ். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.அதனை பயன்படுத்திகொண்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், 10 சவரன் நகையினையும் திருடிசென்றனர்.

பின்னர் அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயையும், மற்றொரு வீட்டில் 2ஆயிரம் ரூபாய் மற்றும் கம்மல் ஒன்றையும் திருடிசென்றுள்ளனர்.இது தொடர்பாக தகவல் தெரிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே பகுதியில் பெண் போலீஸ் வீடு உட்பட அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Sep 2021 4:51 AM GMT

Related News