/* */

கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனை

கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா 27 ஆண்டு சிறை தண்டனை வுிதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

HIGHLIGHTS

கஞ்சா கடத்திய 2 பேருக்கு தலா  27 ஆண்டு சிறை தண்டனை
X

மதுரையை சேர்ந்தவர் முத்து மகன் முனியசாமி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சிறைமீட்டான் மகன் வழிவிடுமுருகன்.இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருமாந்துறை டோல் பிளாசாவில் காரில் கஞ்சா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் குற்றங்கள் தொடர்பான கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தவழக்கில் நீதிமன்ற விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நீதிமன்ற நீதிபதிக குருமூர்த்தி எதிரிகளின் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் தலா 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 23 Sep 2021 5:00 PM GMT

Related News