Begin typing your search above and press return to search.
பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக தமிழகம் முழுவதும் காவல் துறை சார்பில் வீரவணக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுத படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர்கள் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் காவல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.