/* */

குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டாக கிடப்பில் கிடக்கும் குடிநீர் தொட்டியால், மக்களின் அவதி தொடர்கிறது.

HIGHLIGHTS

குன்னம் அருகே ஓராண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
X

தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பெயரளவுக்கு பணிகளை தொடங்கி, ஓராண்டாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையே உள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தில், ஓராண்டுக்கு முன்பு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 3 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான அத்திவாரம் மட்டுமே போடப்பட்டது. அதன்பிறகு, இன்று வரை எவ்விதமான கட்டுமானமோ, தண்ணீர் தொட்டியோ கட்டப்படவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் தொட்டி பணி என்ன ஆயிற்று? அதற்கென்றே ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போனது? பணி ஏன் முடங்கி உள்ளது என்று தெரியவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், எங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது என்றனர்.

கட்டுமானப்பணி இடத்தை, அரசு அதிகாரிகள் பார்வையிட வில்லை. இனியேனும் இப்பகுதியை ஆய்வு செய்து, முடங்கியுள்ள தண்ணீர் தொட்டி பணிகளை தொடங்க வேண்டும்; அதன் மூலம் தங்களது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 15 Sep 2021 4:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி