/* */

கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து போராட்டம்
X

பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காடு கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆழ்குழாய் அமைக்கும் பணி அரசு அனுமதியோடு நடைபெற்றது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்து வந்த நிலையில் இன்று அதற்கான பணியை துவங்கிய போது கீழக்குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இணைந்து ஆழ்குழாய் அமைக்கும் பணியை தடுத்தனர்.

ஏற்கனவே ஆற்றில் கரும்பு சர்க்கரை ஆலைக்கு நீர் பயன்பாட்டுக்கு வேண்டி கிணறு அமைக்கப்பட்டு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தற்போது அமைக்கப்படும் இந்த கிணறுகளால் இப்பகுதியில் நீர்வளம் முற்றிலும் இல்லாமல் போகும் என சாலையில் அமர்ந்து இத்திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து போரட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ஆழ்குழாய் அமைக்கும் கருவிகளையும் அகற்றியதாலும் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 24 April 2021 2:17 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்