/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுத பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயுத பட்டறைகளில் போலீசார் திடீர் ஆய்வு
X

பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு பகுதிகளில் அரிவாள்,கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறையை போலீசார் ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்பேரில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்தியா ,தலைமையில் மங்களமேடு உட்கோட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம்சீகூர் பகுதியில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் செய்யும் ஆயுத பட்டறையை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

மங்களமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தமிழ் செல்வி,ஆயுதங்கள் சரியான முறையில் தயாரிக்கப்படுகின்றதா? ஆயுதங்கள் வாங்கி செல்லும் நபர்களின் தகவல் சேகரிக்கப்படுகின்றதா, என்றும் குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களுக்கு ஆயுதங்கள் விற்கப்படுகின்றதா? என்றும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சட்டப்படி குற்றவாளிகளுக்கு ஆயுதங்கள் விற்றாலோ, தயாரித்து கொடுத்தாலோ அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Updated On: 28 Sep 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...