/* */

பெரம்பலூர்: கொட்டரை கிராமத்தில் இறந்து பிறக்கும் கன்று குட்டிகள்!

பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை கிராமத்தில் தொடர்சியாக கன்றுக்குட்டிகள் இறந்து பிறப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: கொட்டரை கிராமத்தில் இறந்து பிறக்கும் கன்று குட்டிகள்!
X

குறை மாதத்தில் இறந்து பிறந்த கன்றுக்குட்டி.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்காவில் உள்ள கொட்டரை கிராமத்தில் வசித்து வரும் பவுனாம்பாள் என்பவருக்கு சொந்தமான பசு மாடு கன்று ஈன்றது. புதிதாக பிறந்த அந்த கன்று இறந்த நிலையில் வெளிவந்ததாகவும் கன்று வெறும் 8 மாதங்களே வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பெரியம்மாள் மற்றும் வினோதா ஆகியோரின் பசுக்களும் கன்று ஈன்ற போது இதே போல் முழு வளர்ச்சி பெறாமல் இறந்த நிலையில் வெளிவந்ததாக தெரியவந்தது.

சந்தேகம் அடைந்த அப்பகுதி கிராமத்தினர் மாடுகளுக்கு செலுத்தப்பட்ட சினை ஊசியில் ஏதேனும் குறைபாடா அல்லது வேறு ஏதேதும் மாடுகளுக்கு குறையா என அப்பகுதி கால்நடை மருத்துவரிடம் கேட்ட போது, தற்போதுள்ள வெயிலின் காரணமாக கூட இது போன்று நிகழும் என தெரிவித்தாக கிராம மக்கள் கூறினார்கள்.

தொடர்ந்து 3 மாதங்களில் அதே பகுதியில் உள்ள பசுக்கள் ஈன்ற கன்றுகள் இப்படி மர்மமாக இறந்து பிறப்பதால் அப்பகுதி கிராம மக்கள் ஒருவித அச்சத்தோடே காணப்படுகின்றனர்.

Updated On: 4 Jun 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?