/* */

பெரம்பலூரில் "அறிவோம் மார்க்சியம்" தொடர் பயிற்சி வகுப்பு

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் எனும் தொடர் பயிற்சி வகுப்பு நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் தொடர் பயிற்சி வகுப்பு
X

பெரம்பலூரில் அறிவோம் மார்க்சியம் எனும் தொடர் பயிற்சி வகுப்பு நடந்தது.

பெரம்பலூர் ரோவர் பள்ளி அருகே உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் தீக்கதிர் வாசகர் வட்டத்தினர் சார்பில் "அறிவோம் மார்க்சியம்" எனும் தொடர் பயிற்சி வகுப்பு மார்ச் மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய பயிற்சி வகுப்பு நிகழ்விற்கு மக்களுக்கான மருத்துவர் கழகத்தின் மாநில செயலாளர் மருத்துவர் கருணாகரன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் வரவேற்றார். தமுகசவின் மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா "ஏன் எதை எப்படி படிக்க வேண்டும்?"என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக சிமிஜிஹி வின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் நன்றியுரையாற்றினார்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் குமணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Updated On: 6 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  2. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  3. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  5. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  6. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  7. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  10. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...