/* */

குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வழங்காத பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து  காலி குடங்களுடன் சாலை மறியல்
X
குடிநீர் பிரச்சினைக்காக சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் ஒன்பதாவது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இதனையடுத்து இப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அப்பகுதிக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெரம்பலூர்-திருச்சி சாலையில் துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 24 Dec 2021 11:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?