Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூரில், காவல்துறை சார்பில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம், ரஞ்சன்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர், குழந்தை தொழிலாளர் முறையை குறித்தும், அவரவர் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.