Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைப்பு
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன . இதில் 14 கடைகளின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணமான , மொத்தம் ரூ .5 லட்சத்து 25 ஆயிரத்து 945 - ஐ செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது . இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின்பேரில் , நகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த 14 கடைகளை பூட்டி ' சீல் வைத்தனர்.