/* */

பான்கார்டு மோசடி தவிர்ப்பது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

உங்கள் பான் கார்டை சரிபார்க்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

HIGHLIGHTS

Online Tamil News
X

உலகம் முழுவதும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்ததன் விளைவாக நம் நாட்டில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மிகப்பெரிய அளவிலான இலக்கை அடைந்துள்ளது.

அதே வேளையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சில சட்ட விரோத பண மோசடிகளுக்கும் வழிவகுக்குகிறது. உதாரணமாக ஏடிஎம் கார்டு எண்ணை பயன்படுத்தி ஓடிபி மூலம் நடைபெறும் பண மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் பான் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோர் இந்த மோசடியில் சிக்கியதாக தக்வல் வெளிவந்தது. அதேபோல் நடிகர் ராஜ்குமார் ராவ், ஃபின்டெக் மொபைல் செயலி மூலம் தனிநபர் கடன் பெறும் வழக்கில் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து தெரிவித்திருந்தார்.

இதேபோன்ற மோசடிகளுக்கு நீங்கள் ஆளாகாமல், உங்கள் பான் கார்டை சரிபார்க்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

முதலில் உங்கள் பான் எண்ணை பயன்படுத்தி சிபில் (CIBIL) ஸ்கோரை சரிபார்க்கவும். இதற்கு CIBIL, Equifax, Experian அல்லது CRIF High Mark போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தி சிபில் ஸ்கோரைச் சரிபார்க்கலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் பெயரில் ஏதேனும் தவறான கடன் வாங்கப்பட்டுள்ளதா என்பது உங்களுக்குத் தெரிய வரும். தவறான கடன் வாங்கப்பட்டிருந்தால், அதுவும் எளிதாகக் கண்டறியப்படும்.

இதுதவிர பேடிஎம் அல்லது பேங்க் பஜாரிலிருந்தும் பான் கார்டு தகவலைப் பெறலாம். உங்கள் பான் கார்டு எண்னை வைத்து வாங்கப்பட்ட கடன் பற்றி அறிய அல்லது உங்கள் பான் கார்டு மோசடி தொடர்பான தகவல்களைப் படிவம் 26A -வை ஆராய்ந்தும் அறிந்து கொள்ளலாம்.

Updated On: 8 Jun 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  9. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  10. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்