/* */

உலக சுற்றுலா தினம்: உதகை படகு இல்லத்தில் படகு போட்டி

உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்குவதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகமானது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ காரணமாக நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு கோடை விழாக்களும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டம் சீசன் துவங்கியுள்ள நிலையில் இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது இதனையொட்டி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உள்ள உதகை படகு இல்லத்தில் இன்று சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இதில் கலந்துகொண்டு படகு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்று படகு போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். உலக சுற்றுலா தினத்தில் முதல் நிகழ்ச்சியாக உதகை படகு இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியால் படகு இல்லம் களைகட்டி காணப்பட்டது.

Updated On: 28 Sep 2021 7:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்