/* */

நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்

நீலகிரி மாவட்டத்தில், கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்
X
உதகையில், மீண்டும் கோவில்கள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுடன் வருகை தந்த பக்தர்கள். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவ்வகையில், பொங்கல் பண்டிகை ஒட்டி பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தைப்பூச திருவிழா அன்று, எல்க்ஹில் முருகன் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அங்கு நடைபெறவிருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள், கோவில் முன்பு நின்றவாறே சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், 5 நாட்களுக்கு பின்னர், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. கோவில்களுக்கு பக்தர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுடன் வருகை தந்தனர்.

Updated On: 19 Jan 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை