/* */

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
X

ஊட்டி நகராட்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19.02.2022 அன்று நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு இன்று ஊட்டி நகராட்சியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் இருந்து சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையம் வரையும், காந்தல் முக்கோணம் பகுதியில் இருந்து பென்னட் மார்க்கெட் வழியாக ரோகிணி சந்திப்பு வரையும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வஜ்ரா வாகனம் முன்னால் சென்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் தலைமையில் நடந்த அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Feb 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...