/* */

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்பு

மக்கள், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்; அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்கிறார் புதிய கலெக்டர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக அம்ரித் பொறுப்பேற்று கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில், கோப்புகளில் கையெழுத்து இட்டு பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட மாவட்ட நிலை அலுவலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய கலெக்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல்படி நீலகிரி மாவட்டத்தில் மக்களின் நலனுக்காக பணிபுரிவேன். நீலகிரி சூழலியல் அடிப்படிடையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் வரவும், மக்கள் வாழவும் தகுதியானதாக மாவட்டம் இருக்க உறுதி செய்யப்படும்.

மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படும். மசினகுடியில் யானை வழித்தட பிரச்சினைக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 29 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  2. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  5. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  6. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  7. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  9. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  10. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி