/* */

கனமழையால் மண்சரிவு: உதகையில் அந்தரத்தில் தொங்கிய வீடுகள்

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபாதை முற்றிலும் சேதம் அடைந்ததால் குடியிருப்புவாசிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

HIGHLIGHTS

உதகையில் நேற்று 5 மணி முதல் இடியுடன் கூடிய கன மழை இரவு 9 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் நகரில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தால் சேதங்கள் ஏற்பட்டன. உதகையில் மட்டும் 98 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் உதகை நகரிலுள்ள குமரன் நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கியது. மண்சரிவு ஏற்படும் முன் வீடுகளில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபாதையும் முற்றிலும் சேதம் அடைந்ததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் பொழுது இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வருவதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படும் முன் இப்பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பி பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 18 Nov 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?