/* */

தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

நீலகிரி மாவட்டத்தில், தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு  கால அவகாசம் நீட்டிப்பு
X

 கலெக்டர் அம்ரித்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், நடப்பாண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. பெண்களுக்கு வயது வரம்பில்லை.

குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் காலியாக உள்ள தொழில் பிரிவுகளான பொருத்துநர், கடைசலர், கம்மியர் ஆகிய 2 ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தச்சர், பற்ற வைப்பவர் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் அனைத்து பிரிவினை சார்ந்த மாணவர்கள் பயிற்சியில் சேரலாம். கூடலூர் அருகே உப்பட்டியில் பழங்குடியினருக்காக செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 22 Dec 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு