/* */

குன்னூரில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் நேரடி சேர்க்கை முகாம்

நீலகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் குன்னூரில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் நேரடி சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

குன்னூரில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் நேரடி சேர்க்கை முகாம்
X

பைல் படம்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் நீலகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

முகாமில் முன்னணி அரசு பொதுப்பணித்துறை, தனியார் தொழில் நிறுவனங்கள் நேரடி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை மேற்கொள்ள உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு பிரதி மாதம் குறைந்தபட்சம் ரூ.7,000 உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி பெற்று என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றவர்கள் முழு திறன் மிக்கவர்களாக கருதப்பட்டு, மத்திய, மாநில தொழில் சார்ந்த அரசு பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

இதுகுறித்த தகவலுக்கு 9499055709 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 7 Oct 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  3. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  4. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  5. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  7. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  8. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  9. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  10. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...