/* */

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே கரோலினா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்
X

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை வந்து சென்றது, கேமிராவில் பதிவாகி உள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது .குறிப்பாக காட்டெருமை, கரடி சிறுத்தை போன்ற விலங்குகள் உணவைத்தேடி, குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றன.

குன்னூர் அருகே உள்ள கரோலினா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது. அங்கிருந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக வளர்ப்பு நாய் மற்றும் கோழிகளை வேட்டையாடி வந்தது. இந்நிலையில் பொது மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது,

இச்சம்பவம், கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து செல்பவர்கள், அச்சத்துடன் சென்று வருவதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 17 Sep 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி