Begin typing your search above and press return to search.
குன்னூர் அருகே சண்டையிட்ட காட்டெருமைகளால் பரபரப்பு: மக்கள் அச்சம்
குன்னூர் அருகே உலிக்கல் பகுதியில் 2 காட்டெருமைகள் ஒரு மணி நேரம் சண்டையிட்டதால் கிராமமக்கள் கண்டு அச்சமடைந்தனர்.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி கிராம பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராம பகுதிக்கு வந்த 2 காட்டெருமைகள் அங்குள்ள புல் மைதானத்தில் ஒரு மணி நேரம் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு சண்டையிட்டது.
இதனால் கிராம பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி ஓடினர். சிலர் 2 காட்டெருமைகள் சண்டையிடுவதை செல்போனில் பதிவு செய்து ரசித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு சண்டையிட்டு களைத்த காட்டெருமைகள் கலைந்து சென்றன. இந்த காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.