/* */

உதகை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

மசினகுடி அருகே விறகு சேகரிக்க சென்ற மூதாட்டி. காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

HIGHLIGHTS

உதகை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
X

காட்டு யானை தாக்கியதில் பலியான மூதாட்டி சரசம்மாள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அருகே உள்ள ஆனைக்கட்டி பகுதியில் வசித்து வரும் சரசம்மாள் என்ற மூதாட்டி வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதியிலிருந்த காட்டு யானை மூதாட்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவு நேரமாகியும் சரசம்மாள் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் வன பகுதிக்குள் சென்று தேடிய போது அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சீகூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 26 Nov 2021 3:59 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...