/* */

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிராமத்தில் வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது
X

கொளப்பள்ளியில்வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சட்ட விரோதமாக நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் தாலுகாவில் உள்ள கொளப்பள்ளி, குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் லோகேஸ்வரன் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து சட்டவிரோதமாக சாராயம் தயாரித்து, அதை அப்பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சேரம்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாராயத்தை விற்பனை செய்த லோகேஸ்வரன் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சேரம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  2. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  3. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  6. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  7. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  8. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  9. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  10. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...