Begin typing your search above and press return to search.
முதுமலை வனத்தில் அரிய வகை கழுதைப்புலி இறப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனத்தில் வாகனம் மோதி, கழுதைப்புலி இறந்தது.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்ட வனத்துறையினர், வழக்கம் போல் இன்று காலை, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசினகுடி வனச்சரகத்திற்குட்பட்ட ஆச்சக்கரை பகுதியில், ஆண் கழுதைப்புலி இறந்திருப்பதை பார்த்த வன ஊழியர்கள், இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை உயர் அதிகாரிகள், கழுதைப்புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், வாகனம் மோதி அது இறந்திருப்பது தெரிய வந்ததாக கூறினர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.