/* */

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தொடர்ந்து பாடந்துறை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
X

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து அக்கிராம மக்கள் இன்று அதிகாலை கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். அப்போது யானையை விரட்ட வேண்டும் எனவும் காட்டு யானையை பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறை, வருவாய் துறையினர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் யானையை விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 13 Nov 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  5. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  6. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  9. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  10. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்