/* */

கூடலூரில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கூடலூர் மாவட்ட வன அலுவலகம் முன்பு இறந்த பசுவை வைத்து ஸ்ரீ மதுரை ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கூடலூரில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
X
வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புலி ஒன்று அப்பகுதியில் உள்ள வளர்ப்பு மாடுகளை தாக்கி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பலமுறை வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் ஒரு முறை வளர்ப்பு மாடுகளை அடித்தது கொன்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினரிடம் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று ஒரு மாட்டையும், அந்த புலி தாக்கி உள்ளது. இதனைஅடுத்து அப்பகுதி மக்கள் கூடலூர் மாவட்ட வன அலுவலகம் முன்பு இறந்த மாட்டை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக தமிழக அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Updated On: 22 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?